திருமணத்திற்கு கண்டீஷன் போட்ட அப்பா!! எதிர்த்து பேசிய நடிகை சாய் பல்லவி..
சாய் பல்லவி
மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்தில் மலர் என்ற ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் சாய் பல்லவியின் சகோதரிக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்தது.
கண்டீஷன் போட்ட அப்பா
இந்நிலையில் சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில் தன் திருமணம் பற்றி பேசியிருக்கிறார். அதுகுறித்து அவர் பேசுகையில் நான் வயதுக்கு வந்தவுடன் நீ ஒரு படுகர் இனத்தை சேர்ந்தவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.
என் கிராமத்தில் படுகர் இனம் இல்லாமல் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டால் நல்லது. கெட்டதுக்கு அழைக்கமாட்டர்கள்.
நான் சினைமாவிற்கு வந்த சில காலம் கழித்து என் அப்பா என்னிடம் வந்து, நீ படுகர் இனத்தில் இருப்பவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
இது கலாச்சாரத்தை பற்றியது என்று சொன்னார். ஆனால் அவர் ஒரு அப்பாவி, உடனே நான் அவரிடம் உங்கள் கலாச்சாரத்துக்காக நீங்கள் விரும்புவதை எல்லாம் என்னால் செய்யமுடியாது. அது ரொம்பவே தவறு என்றேன் என சாய் பல்லவி கூறியிருக்கிறார்.