விவாகரத்துக்கு பின் 5 கோடி இருக்கட்டும்.. நடிகை சமந்தா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மாடலிங்துறையில் இருந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இதையடுத்து இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் சமந்தா.
தமிழில் பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த சமந்தா நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்தும் புஷ்பாவும்
திருமண வாழ்க்கையில் 4 வருடத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார் சமந்தா. தற்போது தனிமையில் இருந்து வரும் சமந்தா, ஆன்மிகம், க்ளாமர் போட்டோஷூட் என இருந்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் நடித்து வந்த சமந்தா தி பேமிலி மேன் வெப் தொடருக்கு பிறகு முதன் முதலில் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு அப்படியொரு குத்தாட்டம் போட்ட சமந்தா அதற்காக 5 கோடி சம்பளமாக பெற்றார்.
முதல் சம்பளம்
இந்நிலையில் நடிகை சமந்தா வாங்கிய முதல் சம்பளம் பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பேசிய சமந்தாவிடம் முதல் சம்பளம் எவ்வளவு என்று கேட்டுள்ளாரொரு ரசிகர். அதற்கு பதிலளித்த சமந்தா, ஒரு கல்யாண நிகழ்ச்சியில் வரவேற்பு பெண்ணாக என்னுடைய 10ஆம் வகுப்பு படிக்கு சமயத்தில் பணி செய்தேன். அப்போது எனக்கு 500 ரூபாய் சம்பளமாக கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
Her first income was Rs . 500 at 10 th std @Samanthaprabhu2 comes long way ❤️❤️ #SamanthaRuthPrabhu pic.twitter.com/2bBp2fLT8J
— Dhanam 🌹 (@dhanam_arjuner) April 21, 2022