விஜய்யுடன் கைகோர்க்கிறாரா நடிகை சிம்ரன்.. கடும் கோபத்துடன் நடிகை வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவில் எவர் க்ரீன் 90ஸ் ஜோடி என்றால் அது விஜய் - சிம்ரன் தான். இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக இருவரும் இணைந்து ஆடிய நடனம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒன்று.
சமீபத்தில் நடிகை சமந்தா நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து, தன்னுடைய தயாரிப்பில் படம் நடிக்க வேண்டும் என கேட்டதாகவும், அதற்கு விஜய் நோ சொல்லிவிட்டதாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வந்த நிலையில், இதுகுறித்து நடிகை சிம்ரன் கடும் கோபத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"எந்த பெரிய ஹீரோ உடனும் பணியாற்ற நான் காத்து கிடக்கவில்லை. இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால் இதுபோன்ற வதந்திகளை இனிமேல் பொறுத்துகொள்ள மாட்டேன். என்னுடைய குறிக்கோள் வேறு, ஒரு பெண்ணாக என்னுடைய எல்லைகள் என்ன என்பது எனக்கு தெரியும். என்னுடைய பெயரை மற்றவர்கள் உடன் இணைத்து வதந்தி கடந்த பல வருடங்களாக பார்க்கிறேன்".
"Stop என சொல்வது பெரிய வார்த்தை தான். ஆனால் அது தான் தற்போது சரியாக இருக்கும். இந்த செய்தி உண்மையா என்று கூட யாரும் எனக்கு போன் செய்து கேட்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகள் பற்றி யாருக்கும் கவலையில்லை. பொய்யான செய்தி பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என சிம்ரன் பதிவு செய்திருக்கிறார்.
