ஓட்டல் அறைக்கு வற்புறுத்தி வரவழைத்த இயக்குனர்!! அட்ஜெஸ்ட்மெண்ட்-ஆல் தலைக்காட்டாத பிரபல நடிகை..
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை வித்யா பாலன். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த வித்யா பாலன், பல போல்ட்டான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பல ஆண்டுகள் கழித்து தமிழில் அறிமுகமாகினார். ஆனால் இதற்கு முன் தமிழில் ஒரு விளம்பர படத்தில் நடிக்க கமிட்டாகி அதில் நடிக்க முடியாத சூழலுக்கு ஆளாகினார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விளம்பர படத்தில் நடிக்க என்னை இயக்குனர் சென்னை வரவழைத்தார். அப்போது காஃபி ஷாப்பில் பார்க்கலாம் என்று கூறிய வித்யா பாலனை, ஒரு ஓட்டல் அறைக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்தார் அந்த இயக்குனர்.
அறைக்கு சென்ற என்னை கதவை தாழிட சொல்லியது நான் எதற்காக என்று புரிந்து கொண்டேன். ஆனால் நான் கதவை மூடாமல் அவரிடம் பேச ஆரம்பித்ததை எண்ணி நான் ஒத்துழைக்க மாட்டேன் என்று அந்த இயக்குனர் புரிந்து கொண்டார்.
அதன்பின் அவர் வெளியே சென்றுவிட்டு என்னை அந்த விளம்பரத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.