உடல் அமைப்பு குறித்து அந்த மாதிரியான கேள்வி.. கடுப்பான யாஷிகா ஆனந்த்
கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுத்தது. யாஷிகா ஆனந்த் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிரபலமாக முக்கிய காரணமாக அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் தான்.
சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் யாஷிகா.
இந்த நிலையில் அவர் புகைப்படத்திற்கு சிலர், ”விபத்து பிறகு அழகாக இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார் யாஷிகா ஆனந்த் ”என ஒருவர் கமெண்ட் செய்து இருக்கிறார். இதற்கு பதில் அளித்த யாஷிகா, அழகுக்காக நான் எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார்.