ஐஸ்வர்யா ராய் மீது அப்படியொரு வெறி!! 10 கோடி கொடுத்து அதிபர் செய்த செயல்..
உலக அழகி பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் பட வாய்ப்பினை பெற்று கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன்பின் பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து, ஜீன்ஸ், எந்திரன், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், பொன்னியின் செல்வன், ராவணன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா.
காதலித்து திருமணம் செய்து பெண் குழந்தையை பெற்று பெரிய பெண்ணாக வளர்த்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கும் கணவர் அபிஷேக் பச்சனுக்கும் பிரிவு என்று செய்திகள் கசிந்துள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் திருமணத்திற்கு முன் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவர்களுக்காக பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகராக இருந்ததால் அந்த பார்ட்டியில் நடனமாட சுமார் 10 கோடி அளவில் காசு வாங்கி அதிபரை குஷிப்படுத்தியுள்ளார். இந்நிகழ்ச்சி யாருக்கும் தெரியாமல் நடத்தியதால் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது.