போனிகபூர் மூஞ்சிலேயே அஜித் முழிக்க கூடாது என முடிவெடுத்த காரணம் இது தானா
அஜித், போனிகபூர் பல வருடங்களாக நல்ல நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, இருவருக்கும் பேச்சு வார்த்தையே இல்லை என்று பத்திரிகையாளர் அந்தனன் கூறியுள்ளார்.
அப்படி என்ன சண்டை என்று அவரே கூறுகையில், அஜித் போனிகபூருக்கு ஸ்ரீதேவிக்காக தான் 3 படங்கள் நடித்து கொடுத்தார், அஜித் ஸ்ரீதேவி மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
அதனாலேயே நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என 3 படங்களை கொடுத்தார், ஆனால், துணிவு படத்தின் போது அஜித்திற்கும், போனிகபூருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக அந்தனன் கூறியுள்ளார்.
ஏனெனில், அஜித் எப்போதும் பேசியதில் இருந்து மாறவே மாட்டாராம், தனக்கு இவ்வளவு சம்பளம் இதை இப்படி கொடுக்க வேண்டும் என்றால் அதை அப்படியே கொடுக்க வேண்டுமாம்.
அப்படித்தான் துணிவு படத்திற்காக ஒரு பெரும் தொகை சம்பளம் மற்றும் அதை மாதம் ரூ 5 கோடி என அஜித்தின் வங்கிக்கு அனுப்ப வேண்டும் என பேசப்பட்டதாம்.
ஆனால், இதை போனி கபூர் ஒழுங்காக கொடுக்காத காரணத்தால் அஜித் மிகவும் கோபப்பட்டு, இனி இவர் பக்கமே போக கூடாது என முடிவெடுத்ததாக அந்தனன் கூறியுள்ளார்.