ஆனந்த் அம்பானிக்கு கொடுக்கப்பட்ட மிக முக்கிய பொறுப்பு.. அடேங்கப்பா சம்பளத்தை பாருங்க!
அம்பானி
உலக பணக்காரர்களில் ஒருவர் அம்பானி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் இன்று பல கோடி சொத்துக்களுக்கு சொந்தமானவர். இவர் இந்த இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணம் இவருடைய திறமை மற்றும் உழைப்பு தான்.
பல கோடி சொத்து இருந்தாலும் இன்றும் மற்ற மனிதர்களை மதிக்கும் குணம் கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
சமீபத்தில், இவருடைய இளைய மகனான ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
முக்கிய பொறுப்பு
இந்நிலையில், ஆனந்த் அம்பானி நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார், இதனால், இவருக்கு பொறுப்புகளும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆனந்த் அம்பானியின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இவர் இனி ஆண்டுக்கு ரூ.10 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் பெறுவார் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தமது பங்குதாரர்களுக்கு தெரிவித்துள்ளது.