இன்னும் குழந்தை இல்ல.. மற்ற குழந்தைகளை பார்க்கும் போது இப்படி தோணும்!! பிக்பாஸ் அனிதா சம்பத் ஓப்பன் டாக்..
தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் அனிதா சம்பத். ஒருசில படங்களிலும் நடித்து வந்த அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டும் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து 2019ல் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இன்னும் இல்லை என்பது குறித்து எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.
எப்ப குழந்தை அப்படீன்னு யாருமே எங்களை கேட்கறது இல்லை என்றும் நீங்கள் சீக்கிரம் காட்டுங்க அப்படி என்று எங்கள் குடும்ப வட்டாரத்தில் கேட்பார்கள்.
எல்லாமே பக்குவப்பட்ட மனிதர்கலாக இருக்கிறார்கள். ஒருமுறை வேலூர் சென்ற போது அங்கே ஒரு குட்டிப்பாப்பா இருந்தது. அவளை பார்த்ததில் ஒரு மாதிரியாக இருந்தது.
கல்யாணமாகி 4 வருஷம் ஆச்சு. இப்படி பாப்பா ஒண்ணு இருந்தால், அது 3 வயசு இருக்குமே அப்படீன்னு தோணும். இந்த பாப்பாவுக்கு ஒரு வயசுதான் ஆச்சு. ஆனா ஆசையா இருந்துச்சு. இந்த மாதிரி நமக்கு இருந்திருக்குமுன்னு பீல் பண்ணினேன், என்று கூறியிருக்கிறார் அனிதா சம்பத்.