நடிகை பூமிகாவுடன் கிசுகிசு..8 பேர் மீது காரை ஏற்றிருப்பார் ஸ்ரீகாந்த்!! பல மேட்டர்களை உடைத்த பிரபலம்..
ஸ்ரீகாந்த்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீகாந்த். வெற்றிப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீகாந்த், நண்பன் படத்திற்கு பின் பெரியளவில் பேசப்படாத நடிகராக திகழ்ந்தார்.
சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் பற்றிய பேச்சுக்கள் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஸ்ரீகாந்த் பற்றிய சில விசயங்களை பகிர்ந்துள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன்.
பத்திரிக்கையாளர் அந்தணன்
அதில், ரோஜாக்கூட்டம் படம் வெளியான போது புதிதாக லேன்சர் கார் ஒன்றை வாங்கி தன் நண்பருடன் சென்னை முழுவதும் நள்ளிரவில் ரேஸ் ஓட்டினார் ஸ்ரீகாந்த். அப்போது திடீரென ஒரு நபர் குறுக்கே வந்ததால் அவரை இடித்துவிடக்கூடாது என இளையராஜா ஸ்டூடியோவுக்கு அருகே இருந்த எலக்ட்ரிக் ஷாப்பில் காரைவிட்டார்.
எல்க்ட்ரிக் ஷாப்பில் மோதி, மறுபுறம் வந்த கார், அங்கிருந்த போஸ்ட் ஒன்றின் மீது இடித்து மோதி நின்றது. அதனருகே, பிளாட்பாரத்தில் பலர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
நல்லவேளை அந்த இடத்தில் போஸ்ட் இல்லை என்றால் அப்போதே 8 பேர் மீது காரை ஏற்றி பெரிய சிக்கலில் சிக்கியிருப்பார். இன்னொரு முறையும் அவருக்கு கார் விபத்து ஏற்பட்டு உதட்டில் கிளாஸ் பீஸ் எல்லாம் சொருகி, தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார் ஸ்ரீகாந்த்.
பூமிகாவுடன் கிசுகிசு
ஒரு பத்திரிக்கையில் ஸ்ரீகாந்த் நடிகை பூமிகாவுடன் காரில் ஏறி எங்கே சென்றார்? என்ற கேள்வியுடன் ஒரு செய்தி வந்ததை பார்த்து, அம்மா, அப்பா எல்லோரும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள். ஆனால் இதெல்லாம் சாதாரணம் தான், நடிகராக வேண்டும் என்றால் பல சவால்களை சந்திக்க வேண்டும் என்று அவர்களிடம் நான் சொன்னேன்.
இப்போது தகாத நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பல விஷயங்களை செய்திருப்பது அவரைவிட அவரது குடும்பத்தையும் பெற்றோர்களையும் தான் ரொம்பவே பாதிக்கும் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.