ஏன் தனிமையில் இருக்கணும்!! ஜோதிகா - சூர்யா மும்பையில் செட்டிலாக இதான் காரணம்.. பிரபலம்..

Sivakumar Suriya Jyothika Gossip Today
By Edward Sep 22, 2024 04:30 AM GMT
Edward

Edward

Report

சினிமாவை சார்ந்த நட்சத்திரங்களை பற்றியும் வெளியாகும் படங்களை பற்றியும் வெளிப்படையாக விமர்சித்து பேசி வருபவர் பத்திரிக்கையாளர் அந்தணன்.

ஏன் தனிமையில் இருக்கணும்!! ஜோதிகா - சூர்யா மும்பையில் செட்டிலாக இதான் காரணம்.. பிரபலம்.. | Anthanan Talks About Suriya Jothika Mumbai Issue

சூர்யாவின் கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், ஜோதிகாவால் சூர்யா வீட்டுக்குள் பிரச்சனை ஓடிக் கொண்டிருப்பது கடந்த சில காலமாகவெ பேசுபொருளாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சூர்யா மும்பைக்கு சென்று செட்டிலாக ஜோதிகா தான் காரணம் என்றும் சென்னை வந்தால்கூட மாமனார் சிவக்குமாரை சந்திப்பதில்லை என்றும் சொல்லப்பட்டது.

ஜோதிகா - சூர்யா மும்பை

ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்று ஜோதிகாவே கூறினார். ஆனால் சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். சூர்யாவுடனான திருமணத்துக்கு பின் சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

ஏன் தனிமையில் இருக்கணும்!! ஜோதிகா - சூர்யா மும்பையில் செட்டிலாக இதான் காரணம்.. பிரபலம்.. | Anthanan Talks About Suriya Jothika Mumbai Issue

இந்நிலையில், சூர்யா - ஜோதிகா பற்றிய சில விஷயங்களை அந்தணன் அவர்கள் பேட்டியொன்றில், மாமனார் - மாமியாருக்கு வயதாகிக்கொண்டே இருக்கிறது. அவர்கள் ஒருகட்டத்தில் ஓவர் அட்வைஸ் செய்ய ஆரம்பிப்பார்கள். அது இந்தத்தலைமுறைக்கு பிடிக்காது.

மேலும் ஜோதிகாவின் தாய் மும்பையில் வயதாகி தனியாக இருக்கிறார். அதனால் அவரை பார்த்துக்கொள்ளவும் ஜோதிகா மும்பைக்கு சென்றிருக்கிறார். மனைவியும் குழந்தைகளும் அங்கு சென்றப்பின் இங்கு தனியாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் சூர்யா மும்பைக்கு சென்றிருக்கிறார்.

ஏன் தனிமையில் இருக்கணும்!! ஜோதிகா - சூர்யா மும்பையில் செட்டிலாக இதான் காரணம்.. பிரபலம்.. | Anthanan Talks About Suriya Jothika Mumbai Issue

ஆனால் ஜோதிகாவை சூர்யா பிரியப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவுகிறது அதெல்லாம் சுத்த பொய் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.