பிகினியா.. வேண்டவே வேண்டாம்னு ஓடிய நடிகை!! பட்டையை கிளப்பிய நயன்தாரா..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, பாலிவுட்டில் ஜவான் படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். நயன் தாராவின் ஆரம்பகாலக்கட்டத்தில் பல சர்ச்சைகளிலும் காதல் தோல்விகளிலும் சிக்கி வந்தார்.
சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட வேண்டும் என்ற நிலை ஏற்பட, அவரின் மார்க்கெட்டை தூக்கி கொடுத்த படம் பில்லா. பிகினி ஆடையணிந்தும் கவர்ச்சி காட்சிகளிலும் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அப்படத்தில் அப்படி நடிக்க என்ன காரணம் என்பதை கனெக்ட் படத்தின் பிரமோஷனுக்கு கொடுத்த பேட்டியில் கூறியிருப்பார்.
அடக்கவுடக்கமாக நடித்திருந்த போது பலர் என் மீது நம்பிக்கை வைக்கவில்லை. என்னால் அப்படி நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதால் நடித்ததாக நடிகை நயன் தாரா தெரிவித்திருக்கிறார்.
பில்லா படத்தில் நடிகை நயன் தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை அசின் தானாம். அப்படத்திற்காக தேர்வு செய்யப்பட்டு போட்டோஷூட் எடுத்தும் முடித்துவிட்டனர். ஆனால் பிகினி காட்சிகள் பில்லா படத்தில் இருப்பது தெரிந்துவும் அசின் விலகிவிட்டாராம்.
அதன்பின் தான் நயன் தாராவிடம் விஷ்னுவர்த்தன் நடிக்க கேட்டிருக்கிறார். இதன்பின் கிளாமர் ரூட்டில் நடிக்க ஆரம்பித்து பின் ஒரு கட்டத்தில் அந்த மாதிரியான கேரக்டர்கள், காஸ்ட்யூம்களை தவிர்க்க ஆரம்பித்துவிட்டார்.