படப்பிடிப்பில் அந்த இடத்தில் அடித்தாரா இயக்குனர் பாலா!! முற்றுப்புள்ளி வைத்த நடிகை மமிதா பைஜூ..
நடிகர் சூர்யா பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி தானே தயாரித்து செலவு செய்து பாதி படத்தினை முடிந்தார். ஆனால் இரண்டு செட்யூல்கள் முடிந்த நிலையில் என்ன காரணம் என்று தெரியாமல் படத்தில் இருந்து விலகிவிட்டார் சூர்யா. ஆரம்பத்தில் சூர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓட வைத்து கொண்டே இருந்தது தான் பிரச்சனை என்றார்கள். இதனால் தான் சூர்யா பாலாவிடம் இருந்து ஒதுங்க முடிவெடுத்தாராம்.
அதன்பின் சூர்யா விலக, நடிகர் அருண் விஜய்யை வைத்து படம் எடுத்து வருகிறார் பாலா. படத்தில் டீசர் வீடியோ இணையத்தில் வெளியிட்ட பாலா, வணங்கான் படம் அப்படியே பிதாமகன் 2 போல் இருப்பதாக கூறி விமர்சித்து வந்தனர். வணங்கான் படத்தில் நடித்த மலையாள நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு காட்சியின் போது மமிதா பைஜூ டிரம்ஸ் அடித்து பாடிக் கொண்டே ஆடவேண்டிய நிலையில், பாலாவுக்கு திருப்தி ஆகாததால் பல முறை டேக்கானது.
சரியாக செய்யாத மமிதா பைஜூவால் கோபத்தில் இருந்த பாலா பின்னால் இருந்து அவரின் நடிகையின் தோல்பட்டையில் அடித்ததாக இளம் நடிகை மமிதா பாஜூ தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், சரியான விளக்கத்தை நடிகை மமிதா கூறியிருக்கிறார்.
அதில், நான் தமிழ் திரைப்படத்தில் ஈடுபடுவது தொடர்பாக இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு திரைப்பட விளம்பர நேர்காணலின் ஒரு பகுதி மட்டும் பரப்பப்பட்டு, பொறுப்பற்ற தலைப்பை உருவாக்குவதற்காக தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் வேலை பார்த்திருக்கிறேன்.
என்னை ஒரு சிறந்த நடிகையாக மாற்றுவதற்கு அவர் முயற்சித்தார். அந்தப் படத்தில் நான் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த விதமான துஷ்பிரயோகமான நடத்தையையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
பிற தொழில்ரீதியான கமிட்மென்ட்கள் காரணமாகவே, பிறகு அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன். பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல.. யாரோ தப்பா பாத்த வேலை இது... சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் - வணங்கான் சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
