ஆணவத்தில் ஆடிய இசைஞானி!! 2 ஆஸ்கர் நாயகன்களை வைத்து சோளியை முடித்துவைத்த கே பாலச்சந்தர்..

A R Rahman Ilayaraaja
By Edward Mar 14, 2023 11:30 AM GMT
Edward

Edward

Report

70-களில் இறுதி காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்து இசைஞானியாக ஆதிக்கம் செலுத்தி வருபவர் இளையராஜா. அந்த காலத்தில் இருந்தே எம் எஸ் விஸ்வநாதனுக்கு பின் சிம்ப சொப்பனமாக கோட்டை கட்டி வந்தார் இசைஞானி.

புதிதாக வருபவர்களை வளரவிடாமல் தடுத்தும் வந்தார். மேலும் நான் தான் இசைக்கடவுள் என்பது போல் ஆணவத்தில் மற்றவர்களை கீழ்த்தரமாக நடத்தவும் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

அப்படி கே பாலச்சந்தர் தயாரித்த ரோஜா படத்தின் போது தன் ஆணவத்தை அவரிடமே காட்டியிருக்கிறார் இளையராஜா. இதனால் கடுமையாக கோபப்பட்டு இசைஞானியை எப்படியாவது அடக்கிவிட வேண்டும் என்று பிளான் போட்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் தான் பாலசந்தருக்கு அறிமுகமாகி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான். இதனை பயன்படுத்திக்கொண்ட பாலசந்தர், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி சக்கப்போடு போட்ட ரோஜா படத்தில் ஏ ஆர் ரகுமானை இசையமைக்க வைத்துள்ளார்.

ஆணவத்தில் ஆடிய இசைஞானி!! 2 ஆஸ்கர் நாயகன்களை வைத்து சோளியை முடித்துவைத்த கே பாலச்சந்தர்.. | Balachander Intro 2 Music Composer Stop Ilayaraaja

மேலும், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பணியாற்றி இசையமைத்த எம் எம் கீரவாணியை, தான் இயக்கிய அழகன் படத்தில் அறிமுகமாக்கி வைத்தார். அப்படி இவ்விரு இசையமைப்பாளர்களை வைத்து இளையராஜாவின் ஆணவத்தை அடக்க அச்சாணி போட்டிருக்கிறார் கே பாலசந்தர்.