ஒரு பரம்பரை நோய்.. பயில்வான் வெளிப்படை பேச்சு..
ஏ.ஆர் ரஹ்மான் விவாகரத்து
ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து உள்ளனர். 1995ல் அவர்கள் திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு கதிஜா, ரஹீமா என இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானுடன் வந்த பிரச்சனை காரணமாக சாயிரா தனியாக தான் வாழ்ந்து வந்திருக்கிறார். மனக்கசப்பு அதிகம் ஆனது, இடைவெளி தொடர்ந்து பெரிதாகி கொண்டே போனது என்றும், அதை சரி செய்ய வாய்ப்பு இல்லாத நிலையில் தான் இந்த விவாகரத்து முடிவை இருவரும் எடுத்து இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
பரம்பரை நோய்
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஏ ஆர் ரஹ்மான் விவாகரத்து குறித்து சில தகவலை பகிர்ந்துள்ளார். வெளியாகும் வதந்திகள் எல்லாம் சுத்த பொய். அவர் அப்படிப்பட்ட ஆள் எல்லாம் கிடையாது.
அதேபோல் இதில் தனுஷை இழுப்பதும் தேவையில்லாத ஒன்று. முக்கியமாக ஏ ஆர் ரஹ்மான் வீட்டுக்கு விவாகரத்து என்பது ஒரு பரம்பரை நோய்ப்போல் இருக்கிறது. முதலில் அவரது சகோதரி ஒருவர் பத்திரிக்கையாளர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.
பின் ஏ ஆர் ரஹ்மானின் அக்கா மகன் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து பெற்றனர். இப்போது ஏ ஆர் ரஹ்மான் விவாகரத்து அறிவித்துள்ளார்.
இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதற்காக அவர்களது குடும்பத்துள் இப்போதைக்கு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக சொல்கிறார்கள். முக்கியமாக இந்த விவாகத்துக்கு காரணமே ஏ ஆர் ரஹ்மான் ஒரு வருடமாக வீட்டுக்கே வரவில்லை என்பதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் பயில்வான் கொடுத்த பேட்டியில் சொன்ன கருத்துக்களை தான் இந்த செய்தியில் பகிர்ந்திருக்கிறோமே தவிர அவர் சொன்னதற்கு விடுப்பு தளத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.