மூணு குழந்தை எப்படி பெத்தீங்க? உளறிய பாக்கியலட்சுமி சதீஷ்

Serials Baakiyalakshmi
By Edward Jul 04, 2022 02:20 PM GMT
Edward

Edward

Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

மாட்டிக்கொண்ட கோபி

அப்பாவி பெண் பாக்யாவுடன் சந்தோஷமாக வாழாமல் காதலித்து வந்த பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வருகிறார் கோபி. இந்த விசயம் சமீபத்தில் குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் கோபியின் அப்பா கூறி உடைத்துள்ளார்.

ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த பாக்யா மருத்துவமனையில் கார் விபத்தால் அனுமதித்துள்ள கோபி சந்திக்க வந்த போது, ராதிகா கோபியின் மனைவி என்று கூறி அவரை பார்க்க செல்கிறார். இதனை பார்த்த பாக்யா ஷாக்காகி அழுது கோபி அனுமதிக்கப்பட்ட ரூமுக்கு செல்கிறார். அங்கு நீதான் எல்லாம் எனக்கு என்று கோபி புலம்புவதை பார்த்த பாக்யா வாயடைத்து போய் அழுது புலம்பி மழையில் நனைந்து செல்கிறார்.

மூணு கொழந்தை எப்படி

இந்நிலையில் கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷிடம் ஒருசில ரசிகர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளனர். பாக்யாவை விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ணின நீங்க எப்படி மூன்று குழந்தயை பெத்தீங்க என்றும், திருமணமாகிய போது உங்களுக்கு 23 வயது என்றால் பாக்யாவுக்கு எத்தனை வயது என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கோபி, சர்ச்சைக்குள்ளான கேள்வி தான், இந்த ஒரு போஸ்டில் எல்லாத்தையும் கூற முடியாது என்று கூறியுள்ளார்.

உடல் பசி

இதைதொடர்ந்து கோபிக்கு 23 வயசுல இருக்கும் போது அந்த வயசுக்கு என்ன தேவைப்படும், உடம்பு பசியால் குழந்தை பெற்றிருக்கிறார். 23 வருசமாக காதலியை நினைத்து வாழ்ந்து இருக்கிறார். கோபிக்கு 23 வயசுன்னு சொன்ன கதையாசிரியர் பாக்யா வயசு என்னன்னு சொல்லலையே என்று கூறியுள்ளார்.