பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கலவரம்... இவுங்க திருந்தவே இல்லப்பா
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக சீரியல் நடிகை அர்ச்சனா வென்றார். இரண்டாம் இடத்தை டான்ஸ் மாஸ்டர் மணிசந்திரா பெற்றார்.
இந்நிலையில் இந்த பிக்பாஸ் தான் இதுவரை வந்ததில் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் ப்ரதீப் ஆண்டனிக்கு போட்டியாளர்கள் ரெட் கார்ட் கொடுத்து வெளியனுப்பியது தான், இதை முக்கியமாக செய்தது மாயா மற்றும் பூர்ணிமா என்று அனைவரும் இவர்களை திட்டி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மாயா-பூர்ணிமா ஆட்கள் வெளியே இருந்து அவர்கள் நண்பர்களையே ஆடியன்ஸாக அழைத்து வர, அவர்களுக்கு சவுண்ட் அதிகம் வர, கூல் சுரேஷ் என்னப்பா இங்கையும் PR ஆ என்று சொல்ல, அரங்கமே சில நிமிடம் சலசலப்பு ஆகியுள்ளது, பிறகு எல்லாரும் சமாதனமானதாக கூறப்படுகிறது.