சந்தானம் கோபுரத்தில் ஏற்றிவிட்ட ஒரு குப்பை!! மோசமான கலாய்த்து தள்ளிய பிரபலம்..

Santhanam Periyar E. V. Ramasamy Gossip Today
By Edward Jan 17, 2024 12:30 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காமெடி நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, கார்த்தி, சிம்பு, உதயநிதி உள்ளிட்ட பல நடிகர்களுன் இணைந்து நடித்திருந்தார் நடிகை சந்தானம். சில ஆண்டுகளாக காமெடியனாக நடிப்பதை விட்டுவிட்டு ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் படுதோல்வியை கொடுத்திருந்தது.

சமீபத்தில் பொங்கல் அன்று அனைவரும் வாழ்த்து கூறி வந்ததை தொடர்ந்து சந்தானமும் ஒரு வீடியோவை பகிர்ந்து வாழ்த்து கூறினார். நான் அந்த ராமசாமி இல்லை என்று கூறிய அந்த வீடியோவை பலர் கண்டபடி திட்டி சந்தானத்தை வெச்சு செய்து வருகிறார்கள். அப்படி தான் பிரபல சினிமா விமர்சகர் பிம்மி சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமா பல சமயங்களில் குப்பையை கூட கோபுரத்தில் ஏற்றுவிட்டு விடும்.

சந்தானம் கோபுரத்தில் ஏற்றிவிட்ட ஒரு குப்பை!! மோசமான கலாய்த்து தள்ளிய பிரபலம்.. | Bismi Criticized Santhanam Ramasamy Controversy

அப்படி தான் கோபுரத்தில் ஏற்றிவிட்ட ஒரு குப்பை காமெடி நடிகர் சந்தானம். மக்கள் மத்தியில் அப்படி கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு வாழ்ந்து கூறும் போது நான் அந்த ராமசாமி இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொன்னது பெரியாரை தான். அதை பார் கடுமையாக வசைப்பாடி வந்த நிலையில் அதற்கான மன்னிப்பு கேட்காமல் வீடியோவை டெலீட் செய்திருக்கிறார்.

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் பிரமோஷனாக இருந்தாலும் இப்படி மக்களை புண்படுத்துமாறு கூறலாமா?. இதுமட்டும் இல்லாமல் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரில் கூட தந்தை பெரியாரை மோசமாக விமர்சிக்கும் வகையில் வசனம் இடம்பெற்றிருக்கிறது.

சீரியல் நடிகை மைனா நந்தினியா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க..

சீரியல் நடிகை மைனா நந்தினியா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க..

இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராம சாமி தானே நீ? என்று ஒருவர் கேட்க, அந்த ராமசாமி நானில்லை என்று கூறும் வசனம் தான் அது.

இப்படி சந்தானம் திரைக்கு பின் தன்னை சாதிய வன்மம் பிடித்தவர் என்று காட்டிக்கொள்கிறார். இவர் ஜக்கி வசுதேவின் சீடராக இருக்கிறார், இதை அவரது பேட்டியொன்றிலேயே தெரிய வரும் என்று சந்தானத்தை பிஸ்மி கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

மேலும், அமைச்சர் பி டி ஆர் பாலு, ஜக்கி வாசுதேவும், சந்தானமும் தீய சக்திகள் என்று கூறியிருக்கிறார்.