வாய்ப்பு கேட்ட நடிகர், காசுக் கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்!! உண்மையை கூறிய பிளாக் பாண்டி..

Sivakarthikeyan Gossip Today
By Edward Jan 20, 2024 11:30 AM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கால் பதித்து டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். டான், டாக்டர் போன்ற 100 கோடி வசூல் படத்தினை கொடுத்து மிகப்பெரிய இடத்தினை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மாவீரன் படத்தினை தொடர்ந்து கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.

வாய்ப்பு கேட்ட நடிகர், காசுக் கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்!! உண்மையை கூறிய பிளாக் பாண்டி.. | Blacck Pandi Talk About Sivakarthikeyan Avoid

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்திருந்தார். சில பிரச்சனைகள் டெக்னிக்கல் வேலைகளால் படம் பல ஆண்டுகள் கழித்து கடந்த 12 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.

நல்ல வரவேற்பை பெற்று வந்த அயலான் படத்திற்கான பிரமோஷன் வேலைகளையும் சிவகார்த்திகேயன் செய்து வருகிறார். படமும் வெளியாகி 60 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. சமீபகாலமாக சிவகார்த்திகேயன் பற்றிய நெக்ட்டிங் விமர்சனங்கள், தகவல்கள் வெளியாகி அவரது பெயரை டேமேஜ் செய்து வருகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் பற்றிய பிளாக் பாண்டி ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக சென்றிருக்கிறோம். ஒரே மேடையில் இருவரும் காமெடி நிகழ்ச்சி செய்தோம். சிவகார்த்திகேயன், அருண் ராஜா காமராஜுக்கும் நான் சம்பளம் கொடுத்திருக்கிறேன்.

வாய்ப்பு கேட்ட நடிகர், காசுக் கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்!! உண்மையை கூறிய பிளாக் பாண்டி.. | Blacck Pandi Talk About Sivakarthikeyan Avoid

நடிகர் சங்கத்தில் ஒருமுறை சிவகார்த்திகேயன் பார்க்கும் போது பேசனும் என்று கூறினேன். ஆனால் சிவகார்த்திகேயன், மேனேஜரிடம் 20 ஆயிரம் காசு கொடுத்து அனுப்பினார். என் அம்மா தம்பி அவர் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கொடுங்கள், காசு வேண்டாம் என்று மேனேஜரிடன் கூறினார்.

நானும் அதைத்தான் சொன்னேன். இது எனக்கு தேவையில்லை, நான் பேசனும் என்று சிவாவிடம் கூறுங்கள் என்றும் நடிப்புக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினேன். அவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, அதன்பின் சிவகார்த்திகேயன் பேசவில்லை. 3 ஆண்டுகளாக கண்டுக்கொள்ளவில்லை என்று பிளாக் பாண்டி தெரிவித்திருக்கிறார்.