ஹீரோயினுக்கு ரூம்.. விஜய்க்கு மரத்தடி!! தளபதிக்கு படப்பிடிப்பில் பளார்விட்ட எஸ் ஏ சந்திரசேகர்..

Vijay Gossip Today S. A. Chandrasekhar
By Edward Sep 24, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

இயக்குநர் களஞ்சியம்

தமிழ் சினிமாவில் பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி சமீபத்தில் முந்திரிக்காடு என்ற படத்தையும் இயக்கி பிரபலமானவர் இயக்குநர் களஞ்சியம். சமீபத்தில், நடிகர் விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

ஹீரோயினுக்கு ரூம்.. விஜய்க்கு மரத்தடி!! தளபதிக்கு படப்பிடிப்பில் பளார்விட்ட எஸ் ஏ சந்திரசேகர்.. | Director Kalanjiyam Open About Sac Slap Vijay

அந்த சமயத்தில் ஆக்‌ஷன் சார்ந்த படம் பிடிக்க ஆசை. விஜய் தங்கமான பையன், ஒரு செய்தியை சொல்கிறேன், இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கும் விஜய் உருவாக அவரின் அப்பா எப்படி காரணம் என்று ஒரு சம்பவம் மூலம் சொல்கிறேன். ஒரு பாடலில் இரு காட்சி ஷூட் எடுக்க வேண்டியிருந்தது, விஜிபியில் நடத்தினோம்.

சங்கவிக்கு ரூம்

விஜிபியில் சங்கவிக்கு ரூம் போட்டுவிட்டோம், ஆனால் விஜய்க்கு ரூம் போடவில்லை மரத்தடியில் உட்கார வைத்து மேக்கப் போட்டோம். விஜய்க்கு பிரச்சனையில்லை, ஸ்டார் எல்லாம் கிடையாது, சங்கவிக்கு தான் இருந்தது. மேக்கப் போடும் போது இதை விஜய்யுடன் இருக்கும் சிலர், பல விஷயங்களை இதுபற்றி பேசியிருக்கிறார்.

அதன்பின் ஒரு ஷாட் முடிந்ததும் கோபத்தில் சட்டையை பிடுங்கி தூக்கி போட்டு இயக்குநரிடம் பேசிவிட்டு அப்படியே காரை எடுத்து சென்றுவிட்டார். தயாரிப்பாளர், விஜய்யின் அப்பாவுக்கு கால் செய்து பேசியிருக்கிறார்கள். 1 மணிநேரம் கழித்து வீட்டில் இருந்தபடியே அப்படியே ஷூட்டிங்கிற்கு வருகிறார். பின்னால், விஜய்யும் வருகிறார்.

ஹீரோயினுக்கு ரூம்.. விஜய்க்கு மரத்தடி!! தளபதிக்கு படப்பிடிப்பில் பளார்விட்ட எஸ் ஏ சந்திரசேகர்.. | Director Kalanjiyam Open About Sac Slap Vijay

விஜய்யை அடித்த எஸ் ஏ சி

காரில் இறங்கியதும் விஜய்யை கன்னத்தில் பளார் என்று அடித்திருக்கிறார். உனக்கு வெட்கமாக இல்லையா? ஒரு ஹீரோயினுக்கு ரூம் போட்டு கொடுத்திருக்காங்க உனக்கு ரூம் போடாமல் இருக்க என்னடா அர்த்தம், இதைவிட நீ பெருசா வரணும் உன்னை கேட்காமல் ரூம் போடும் அளவிற்கு ஒரு வைராக்கியம் தான் வரவேண்டும்.

கோச்சிக்கிட்டு போற, அசிங்கமா இல்லையா என்று கூறினார். அதன்பின் தயாரிப்பாளர், இயக்குநரை பயங்கராம கத்தி பேசினார் எஸ் ஏ சந்திரசேகர். அப்படி அவர் பேசியதால் தான் விஜய் இந்த இடத்திற்கு வந்தார் என்று நான் நம்புகிறேன் என்று இயக்குநர் களஞ்சியம் பகிர்ந்துள்ளார்.