காதலிச்சேன் ஆனா..விருப்பம் இல்லாமல் தாலி கட்டினேன்!! இயக்குநர் மாரி செல்வராஜ் ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தார். சமீபத்தில் வாழை என்ற படத்தினை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
தாலிக்கட்டி திருமணம்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு பிளாக் அண்ட் ஒயிட் பிடிக்கும், நான் இன்னும் பழைய நினைவுகளின் ஞாபகத்தில் தான் இருக்கிறேன். நான் இன்னும் புதிதாக வாழ ஆரம்பிக்கவில்லை, நான் புதிதாக வாழ்கிறேன் என்றால் என் பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கைதான், அதுதான் என் புதிய வாழ்க்கை.
மேலும் பேசிய மாரிசெல்வராஜ், தன் திருமண சீக்ரெட் குறித்தும் பேசியிருக்கிறார். நானும் என் மனைவியும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம் என்றும் ஆரம்பத்தில் என் மனைவியின் வீட்டில் எதிர்ப்பு இருந்தது.
முக்கிய காரணம்
பின் அது சரியாகி இருவீட்டு பெற்றோர்களிடம் பேசினார்கள். ஆனால் என் மனைவியின் அம்மா, தாலிக்கட்டி தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார்கள், ஆனால் தாலிக்கட்டி திருமணம் செய்து கொள்வதில் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இதனால் விருப்பமே இல்லாமல் தான் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டேன் என்றும் அதேபோல் என் மனைவிக்கு தாலிக்கட்டி திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. என்னை பொறுத்தவரை ஒரு பெண்ணை காதலிக்கிறோம் என்றால் அந்த பெண்ணை எப்படி திருமணம் செய்து கொண்டால் என்ன என்பதுதான் என் எண்ணம்.
மனைவி திவ்யாவை திருமணம் செய்து கொள்ள முதல் முக்கிய காரணம் அவரின் அப்பா, அம்மா எல்லோரும் கலையை நேசிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். கலையை நம்பினார்கள் என்று உருக்கமாக பேசியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.