சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale!! டைட்டில் வின்னர் திவினேஷுக்கு கிடைத்த பட்டம்..
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்த நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாம்ஸ் 4. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் 6 பேர் இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டனர்.
ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி உள்ளிட்ட 6 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தயாராகினர். நேற்று மே 11 ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து நேரு ஸ்டேடியத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறுதி சுற்றுப்போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். சிறப்பாக பாடி அசத்திய திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னராக சிவகார்த்திகேயனால் அறிவிக்கப்பட்டார்.
மெல்லிசை இளவரசர்
10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை பெற்ற திவினேஷுக்கு, மெல்லிசை இளவரசர் என்ற பட்டத்தையும் சிறப்பு விருந்தினர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. திவினேஷுக்கு மெல்லிசை இளவரசர் பட்டத்தை கொடுக்கப்பட்டதற்கு பலரும் பாராட்டி வருகிறார்கள்.