திரௌபதி வந்தப்ப எங்க சார் போனீங்க, அன்புமணிக்கே செக் வைத்த ரசிகர்கள்
Suriya
Anbumani
Jai bhim
By Tony
தமிழ் சினிமா என்பது தற்போது பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது.
திரௌபதி, ருத்ர தாண்டவம் மாதிரியான படங்கள் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வந்த ஜெய்பீம் திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக வட இந்தியாவில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஜெய்பீம் படத்தில் வேண்டுமென்றே தங்கள் சமூகத்தை தவறாக காட்டியுள்ளனர்.
இதனால் சூர்யா பின்விளைவுகளை அடுத்தப்படம் ரிலிஸாகும் போது சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருமே, திரௌபதி, ருத்ர தாண்டவம் படம் வந்தப்ப எல்லாம் எங்க போனீங்க, அப்ப மட்டும் நல்லா இருந்துச்சா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.