காதலால் பலமுறை தற்கொலை முயற்சி செய்த அர்ஜுன் பட நடிகை.. தற்போதை நிலை

arjun gazala Ezhumalai
By Edward Jul 09, 2021 09:55 AM GMT
Edward

Edward

in Gossip
Report

தமிழில் ஏழுமலை, நீ வேண்டும் என் செல்லம், ராம், மதராசி, எம்டன் மகன் போன்ற படத்தின் மூலம் நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை கஷாலா சாயிக் கான். இடையில் படங்களில் இருந்து விலகி படிக்க சென்று விட்டார்.

வெற்றிகரமாக தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு திரும்பியும் கஷாலா சாயிக் கான் இப்போது மீண்டும் திரையுலகத்திற்குள் நுழையப் போகிறாராம். தெலுங்கு பக்கமும் நடிக்கப் போனார். அங்கே போன வேகத்தில் ஏதோ ஒரு காதலில் சிக்கி, மனம் விரக்திக்கு ஆளாகி தற்கொலைக்குக்கூட முயன்றார்.

அப்போது நமது அர்ஜூன்தான் ஓடோடிச் சென்று அவரை கவனித்து ஆறுதல் சொல்லி தேற்றி அழைத்து வந்தார். தற்போது மீண்டும் சினிமாத்துறையில் நடிக்கவிருப்பதாக இருக்கிறார். நதியா, ரேவதி, ஷாலினி மூவருமே எனது ரோல்மாடல்கள்.. இத்தனையாண்டு கால நடிப்பு அனுபவத்தை வைத்துக் கொண்டு வேறொரு புதிய துறையை தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால், என் மனம் ஒப்பவில்லை. ஆகவே நான் மறுபடியும் இதே திரைத்துறையில் கால் பதித்து வெற்றிகரமாக எனது நடிப்புத் திறனை காண்பித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்..” என்று உறுதியாகச் சொல்கிறார் கஷாலா சாயிக் கான். தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.