சைந்தவி ரொம்ப நல்ல பொண்ணு.. சேரணும்னு ஆசை!! மகன் விவாகரத்தில் ஓப்பனாக பேசிய தாய் ரைஹானா..
முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜி வி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் திருமணம் செய்த பல ஆண்டுகள் கழித்து விவாகரத்து அறிவிப்பை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஜிவி பிரகாஷ் குமாரின் தாயாரான ஏ ஆர் ரைஹானா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மகனின் விவாகரத்து குறித்து பகிர்ந்துள்ளார். மீண்டும் சைந்தவி வீட்டுக்கு வரணும் என்று கூறியிருக்கிறார்.
என் மகள் போல் சைந்தவியை பார்த்தேன், சிறந்த பெண். இது பற்றி என் மகனிடம் கேட்டபோது, அவன் சொல்லும் காரணங்கள் எனக்கு உடன்பாடில்லை, வேலிடிடிட்டி இல்லை, அவனை நான் கட்டாயப்படுத்த முடியாது. கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் வேறொரு பேட்டியொன்றில், அவர்கள் இருவரின் முடிவு, வேறு யாரும் நுழையமுடியாது. அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னால் ஒன்றும் பண்ணமுடியாது. தனிப்பட்ட முறையில் ஜிவி பிரகாஷ் விவாகரத்து பற்றி கேட்டீர்கள் என்றால், சைந்தவி ரொம்ப நல்ல பொண்ணு, அது ஒரு பெரிய இழப்பு.
தவிர்க்கமுடியாத சூழ்நிலை இருக்கு, அதை விவரிக்க முடியாது. சைந்தவி நம் வீட்டிற்கு வந்தால், ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு, அவளை விட்டு கொடுக்க முடியாது, இருவரும் சேர்ந்து வாழனும் என்று என்னோட ஆசை என்று ஜிவி பிரகாஷ் குமாரின் தாயார் ரைஹானா பகிர்ந்துள்ளார்.
மேலும் பேசிய ரைஹானா, ஜிவி பிரகாஷிடம் பேசும்போது அவன் சொன்ன காரணத்தில் எனக்கு உடம்பாடில்லை, அதன்பின் அவனிடம் ஏதும் பெசவில்லை என்றும் ஜிவி பிரகாஷ் தாயார் பகிர்ந்து கொண்டுள்ளார்.