ஜீவனாவம்சமாக 70 சதவீத சொத்து? மனைவி நடாஷாவை விவாகரத்து செய்த ஹர்திக் பாண்டியா..
ஐபிஎல் 2024 போட்டியில் கேப்டனாக இருந்து தோல்விகளை சந்தித்த ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் பலர் வெறுத்து கேலி செய்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற ஹர்திக் பாண்டியா மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
கடந்த 2020-ல் செர்பியாவை சேர்ந்த மாடல் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச் என்பவரை காதலித்து லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நடாஷா கர்ப்பமாகிய சில மாதத்தில் ஹர்திக் பாண்டியா திருமணம் செய்தார். திருமணமாகி ஒரு குழந்தை பெற்று இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
சமீபகாலமாக, ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷாவும் பிரிந்துவிட்டதாகவும், நடாசா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவுடன் எடுத்த சில புகைப்படங்களை டெலீட் செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் செய்தியும் தன்னுடைய சொத்தில் 70 சதவீதம் பங்கினை மனைவி நடாஷாவுக்கு ஹர்திக் பாண்டியா எழுதி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மகனுக்கு ஜூலை மாதம் 30 ஆம் தேதியோடு 4 வயதாகப்போகும் நிலையில் இருவரும் பிரியப்போவது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் ஹார்திக் பாண்டியாவும் நடாஷாவும் பிரிந்து வாழப்போவதை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதுதான் இருவரது நலனுக்கும் சரியான முடிவு என்றும் எங்களுடைய மகன் அகஸ்தியா இருவரிடம் வளர்வான், நாங்கள் அவனுக்கு தேவையானதை செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த தகவல் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.