ஆர்யாவுடன் நடிக்க மாட்டேன்!! உண்மையான காரணத்தை சொன்ன நடிகை அபர்ணதி..
நடிகை அபர்ணதி
பிரபல தொலைக்காட்சி சேனலில் நடிகர் ஆர்யாவிற்காக பெண் தேடும் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அதற்காக பல பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

அதில் முக்கிய இடத்தை பிடித்தவர் அபர்ணதி. நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காத ஆர்யா மீது கோபத்தில் அபர்ணதி இருந்திருக்கிறார்.
இதனையடுத்து, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகினார். பின் தேன், உடன்பால், டிமோன், இறுகப்பற்று, சாமானியன், மாய புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தேன் படத்திற்கான சிறந்த நடிகைக்காக தமிழக திரைப்பட விருதினை பெற்றார் அபர்ணதி.

ஆர்யாவுடன் நடிக்க மாட்டேன்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் ஆர்யாவுடன் நடிக்கமாட்டேன் என்று கூறியதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். அதில் அபர்ணதி, நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் 100 நாட்கள் நடிகர் ஆர்யாவுடன் பயணம் செய்திருக்கிறேன். நல்ல நினைவுகள் உள்ளது.

அதனால் ஒரு போலி ஸ்டோரியை வைத்து அவருடன் ரொமான்ஸ் அல்லது தங்கை ரோல் பண்ணுவதற்கு விருப்பமில்லை. அதனால் தான் எனக்கு ஆர்யாவுடன் படம் பண்ண விருப்பமில்லை என்று கூறியதாக நடிகை அபர்ணதி தெரிவித்துள்ளார்.