அது நிரூபிக்கப்பட்டால் கணவரை விட்டு விலகுவேன்!! ஜானி மாஸ்டரின் மனைவி ஆதங்கம்...
மலையாள சினிமாவில் படவாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லைகள் அதிகளவில் இருப்பதாக ஹேமா கமிட்டி என்பதை உருவாக்கி பல விஷயங்களை அறிக்கை ஒன்றில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தது. பல பெண்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்களும் வெட்டவெளிச்சத்திற்கு வந்தது.
ஜானி மாஸ்டர் மனைவி
இந்நிலையில் ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக்கலைஞராக இருந்த் ஒரு பெண் தற்போது தனியாக நடன இயக்குநராக செயல்பட்டு வருகிறார். 21 வயதான அப்பெண் துணிச்சலுடன் ஜானி மாஸ்டரால், ஹைதராபாத், சென்னை, மும்பை போன்ற இடங்களில் ஷூட்டிங்கிற்கு சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்று கூறியிருக்கிறார்.
ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டதை அடுத்து கைதும் செய்யப்பட்டார். இதுகுறித்து ஜானி மாஸ்டரின் மனைவி அளித்த பேட்டியொன்றில், ஜானி மீது புகாரளித்துள்ள பெண் சிறுமியாக இருக்கும்போது மேடை நிகழ்ச்சியில் நடனமாடினார். சினிமாவில் சொகுசு வாழ்க்கை வாழ ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்து உதவி நடன இயக்குநராக வேலை பார்த்தார்.
ஹைதராபாத் திரைப்பட அசோசியேஷனில் உறுப்பினராக பணமில்லாத போது ஜானிதான் அந்த பெண்ணுக்கு காசு கொடுத்து உதவினார். நடன அமைப்பாளர் அல்லது நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த பெண்ணுக்கு ஜானிதான் தன் படங்களில் வாய்ப்புகளை வழங்கினார்.
விலகவும் தயார்
இப்போது அந்த பெண்ணே பாலியல் புகார் அளித்திருக்கும் போது மும்பையில் நடந்த சம்பவத்துக்கு ஆதாரம் இருக்கிறதா? அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள் என்று யாராவது பார்த்திருக்கிறார்களா?
அப்போதே ஏன் அந்தப்பெண் வெளியே சொல்லவில்லை, பாலியல் தொல்லைக்கு உள்ளானால் அப்பெண் ஏன் ஜானியிடம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி ஜானி மாஸ்டரிடம் பணியாற்றுவது அதிர்ஷ்டம் என்று கூறியதும் ஏன் என்றும் பாலியல் வன்கொடுமையை ஜானி செய்தது நிரூபிக்கப்பட்டால் நான் என் கணவரைவிட்டு விலகவும் தயாராக இருக்கிறேன் என்று ஜானி மாஸ்டர் மனைவி தெரிவித்துள்ளார்.