மியூசிக் ரூமில் மெழுவர்த்தி ஏற்றும் ஏ ஆர் ரகுமான்!! காரணமே இதற்கு தானாம்..
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசையால் இந்திய சினிமா ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை பெற்றவர். தற்போது ராயன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் பிரபல பாலிவுட் பாடலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜாவித் அக்தர், ஏ ஆர் ரகுமான் பற்றிய சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். 76 வயதாகும் ஜாவித் அக்தர், ஏ ஆர் ரகுமானின் மியூசிக் அறையில் எப்பவும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்திருப்பார்.
அது எனக்கு சற்று வித்தியாசமாக தெரிந்ததால், ஏன் இப்படி மெழுகுவர்த்தி ஏற்றுகிறீர்கள் என்று கேள்வி கேட்டேன். அதற்கு ரகுமான், எல்லாமே இங்கு மெக்கானிக்கலாக உள்ளது, எல்லாமெ மெஷின்.
அதனால் மெஷின் இல்லாத ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். அதாவது நிஜமான ஒன்று இருக்க வேண்டும். மெழுகுவர்ட்த்ஹி மெஷின் கிடையாது, அதிலிருந்து வரும் வெளிச்சம் மெஷின் இல்லை.
அது பல்ப் இல்லை, மெஷின்களை தாண்டியும் இந்த வாழ்க்கையில் பிற விஷயங்கள் இருக்கிறது என்பதை மெழுகுவர்தி உணரச்செய்யும் என்று ஏ ஆர் ரகுமான் என்னிடம் கூறியிருந்தார் என்று ஜாவித் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.