ஜெயலலிதா காலுக்கு கீழ் என் புகைப்படமா? நடிகர் ராமராஜனை வைத்து பத்திரிகையாளர் செய்த செயல். REWIND
தமிழ் சினிமாவிலலும் அரசியலிலும் ஈடுட்டு நல்ல வரவேற்பு பெற்றவர்களில் முக்கியமானவர் நடிகர் எம் ஜி ஆர். அவருக்கு அடுத்தாக அவர் இடத்தினை சிறப்பாக செய்து அக்கட்சியை நல்ல ஒரு இடத்திற்கு கொண்டு சென்றவர் ஜெயலலிதா. தொண்டர்களின் ஆதரவாலும் தேர்தலின் வாக்குகளாளும் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பதற்கு முன்பே பல விதமான பிரச்சனைகளை சந்தித்தார். அதனால் அரசியலில் யார் யாரை எப்படி எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.
மேலும் அவருக்கு இணையாக யார் இருக்க வேண்டும் என்பது கூட அவர் தான் முடிவு செய்வாராம். அந்த அளவிற்கு மற்றவர்களை புரிந்து வைத்திருப்பார் ஜெயலலிதா. அந்தவகையில், அவரின் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வருவதற்கு முன்பு ஜெயலலிதாவிடம் அந்த புகைப்படம் சென்று அவருடைய அனுமதி பெற்ற பிறகுதான் பத்திரிகைகளில் புகைப்படத்தை வெளியிடுவார்கள்.
அப்படி ஒருமுறை ஜெயலலிதாவிற்கு இணையாக ராமராஜன் இருக்கும் புகைப்படத்தை ஜெயலலிதாவிடம் கொண்டு சென்றுள்ளனர். புகைப்படத்தை பார்த்து கேள்விக்குறியை மட்டும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார் பத்திரிக்கையாளரும் நடிகைருமான பயில்வான் ரங்கநாதன்.
பின் பயில்வான் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பெரியதாக பதிவிட்டு ராமராஜன் புகைப்படத்தை ஜெயலிதாவின் காலுக்கு கீழ் வரும்படி பதிவிட்டு ஜெயலலிதாவுக்கு அனுப்பி சம்மதம் வாங்கியுள்ளார். இதற்கு நடிகர் ராமராஜன் என் புகைப்படம் வந்தாலே போதும் என்று சகஜமாக கூறியுள்ளாராம்.