சூர்யாவை ஒரு நாளைக்கு கடனாக கேட்ட ரசிகை!! உடனே நடிகை ஜோதிகா செய்த செயல்..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர்களில் ஒருவர் நடிகை திரிஷா. நடிகர் சூர்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து காதலிக்க துவங்கினார். இருவரும் காதலில் உறுதியாக இருந்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் குடும்பம், குழந்தைகளை பார்த்து வந்த ஜோதிகா பல ஆண்டுகளுக்கு பின் நடிக்க ஆரம்பித்தார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா பாலிவுட்டில் அஜய் தேவ்கன், மாதவன் நடித்த சைத்தான் படத்தில் நடித்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோதிகா சமீபத்தில் தான் நடித்த சைத்தான் படத்தில் நடித்ததற்கு நன்றி கூறி ஒரு பதிவினை போட்டிருந்தார்.
அந்த பதிவில் சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவர், SOK படத்தில்(சில்லுனு ஒரு காதல்) எப்படி சூர்யா ஒரு காட்சியில் ஒரு நாளைக்கு கடனாக கொடுத்தாரோ, அதேபோல் என்னிடம் சூர்யா சாரை ஒரு நாள் கொடுங்கள். ஏனென்றால் 15 ஆண்டுகளாக ஒழுக்கமாக சூர்யா சாரின் ரசிகையாக இருந்து வருகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். அதற்கு நடிகை ஜோதிகா, oops not allowed என்று ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.
மேலும் அந்த ரசிகை, அவர் எப்போது உங்களுடையவர் தான், சூர்யா பெயர் இருந்ததற்காக, இதற்கு ரீப்ளே செய்தீர்கள் என்றூ ஹார்ட்டின் எமோஜியை அனுப்ப, அதற்கு ஜோதிகாவும் ஹார்ட்டின் எமோஜி அனுப்பி ரீப்ளே செய்திருக்கிறார். இந்த பதிவுகளை பார்த்து ரசிகர்கள் ஜோதிகாவை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
. @Suriya_offl ? pic.twitter.com/XXNpd7RIYb
— Rolex Kadal (@Kadal_offl) March 21, 2024
