மட்டம் தட்டி அசிங்கப்படுத்திய கமல் ஹாசன்.. பழிவாங்கி பகையை தீர்த்துக்கொண்ட பாக்யராஜ்..
தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத அளவிற்கு தன் படங்களால் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் நடிகர் கமல் ஹாசன். 230க்கும் மேற்பட்ட படங்களில் பல வெற்றிகளை கொடுத்த கமல் தன் நடிப்பால பிரம்மிக்கவைக்கவும் செய்திருக்கிறார்.
16 வயதினிலே
அப்படி 1977 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது 16 வயதினிலே. இப்படத்தில் கமல் ஹாசனின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இப்படத்தில் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார் கே பாக்யராஜ். படத்தில் வைத்தியர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்த பாக்யராஜ், இதுகுறித்த ஒரு சம்பவத்தை சில வருடங்களுக்கு முன் பகிர்ந்துள்ளார்.
பழித்தீர்த்த பாக்யராஜ்
மயிலுக்கு உடல் சரியில்லாமல் இருப்பதால் சப்பானி வைத்தியரை வீட்டிற்கு அழைத்து வருவது போல் காட்சி ஒன்று அமைந்தது. ஷூட்டிங்கின் போது வைத்தியாராக நடிக்கவிருந்தவர் அன்று வரவில்லை என்பதால் நான் நடிக்கிறேன் என்று பாரதிராஜாவிடன் பாக்யராஜ் கூறியுள்ளார்.
பாக்யராஜ நடிப்பதாக இருப்பதை அறிந்த கமல், என்னை நடித்துக்காட்டுமாறு சொன்னார். ஆனால் பல டேக்குகளில் சொதப்பிதால் பாக்யராஜை மட்டம் தட்டுவது போல் இவருக்கு நடிப்பு வரவில்லை வேண்டாம் என்று கூறினாராம்.
என்னால் பண்ண முடியும் நம்புங்கள் என்று அடுத்த டேக்கில் சரியாக முடித்து கொடுத்துள்ளார். ஆனால், ஆத்தா இல்லாமல் கஷ்டப்படும் மயிலுக்கு நீதான் எல்லாமும் இருந்து ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்ற வசனத்தோடு,
எல்லாத்துக்கும் கோவில் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டே இரு என்று இல்லாத வசனத்தை கூறி பழி வாங்கி இருக்கிறார் பாக்யராஜ். இதனால் பாரதிராஜாவும் கமல் ஹாசனும் ஷாக்காகினார்களாம். அப்படி ஆரம்பித்த நடிப்பு தான் தற்போது பாக்யராஜை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.