செருப்பால அடிப்பேன்னு சொன்ன நடிகை!! கஸ்தூரி கொடுத்த ரியாக்ஷன்...
பாக்யராஜ்
இயக்குநர் பாக்யராஜ் கடந்த ஜூன் 27 ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாக்யராஜின் உடலை சுற்றி நின்று சிலர் வீடியோ எடுத்தது, பிரபலங்கள் வரும்போதும் போகும்போதும் மைக் நீட்டி கேள்வி கேட்டது, குடும்பத்தினரின் துயரைத்தை பொருட்படுத்தாமல் நடந்து கொண்ட பல விஷயங்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியது.

அப்போது இப்படி வீடியோ எடுக்கிறவங்களை செருப்பால அடிப்பேன் என்று சுஹாசினியும், கையெடுத்து கும்பிட்டு இந்த இடத்தை சர்க்கஸ் ஆக்காதீங்க என்று கோபமாக ராதிகா சொன்னதும் பெரிய விவாதமாகியது. சிலர் அப்படி பேசக்கூடாது என்றனர். மற்றும் சிலர் அந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் அப்படித்தான் ரியாக்ஷன் கொடுத்திருப்பார்கள் என்றனர்.
நடிகை கஸ்தூரி
இதுகுறித்து நடிகை கஸ்தூரி பேசுகையில், சுஹாசினி சொன்னதில் எனக்கு எந்த தப்பும் தெரியல, ராதிகாவும் செய்தது தவறுன்னு சொல்ல முடியாது. அந்நேரத்தில் அங்கே என்ன சூழ்நிலை இருந்தது என்பதை பார்த்தால்தான் புரியும்.

குடும்பத்தினர் உயிரே போன வேதனையில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் சிலர் கேமரா, மைக், மொபைல் எடுத்துக்கிட்டு யார் எப்படி அழுறாங்கன்னு படம் பிடிக்கிறாங்க, இதை பார்த்தா யாருக்குதான் கோபம் வராது என்ற கேள்வியை கேட்டுள்ளார்.