காரித்துப்பி பேசினாரே அது எல்லாம் மறந்து போச்சா? மணிமேகலையை வெளுத்து வாங்கிய குரேஷி
பிரியங்கா - மணிமேகலை
சமுகவலைத்தளங்களில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் சம்பவம் தான் பிரியங்கா - மணிமேகலை பிரச்சனை. குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேற பிரியங்கா காரணமாக இருப்பதை வைத்து பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு பிரியங்காவை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
குரேஷி
இந்நிலையில் மணிமேகலைக்கு சப்போர் செய்வது போன்று ஒரு பதிவினை போட்டு குரேஷி டெலீட் செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஒரு வீடியோவில், தன்மானம் பெரிது என்று பேசிய மணிமேகலை, கடந்த சீசனில் அதுவரைக்கும் கோமாளியாக இருந்த சிவாங்கி குக்காக வந்ததும் அவரோடு கோமாளியாக தன்னால் வேலை செய்ய முடியாது என்று சொன்னார்.
நீயெல்லாம் ஒரு குக்கு நான் உனக்கு கோமாளியா இருக்கணுமா? என்று காரித்துப்பி பேசினாரே அது எல்லாம் மறந்து போச்சா? அப்போ அவங்களுக்கு தன்மானம் இல்லையா?.
அப்போது ரக்ஷன் தான் தொகுப்பாளராக இருந்தார், கடந்த சீசனில் கோமாளியாக விலகிய மணிமேகலை நான் தொகுப்பாளராக வந்தால் தான் வருவேன் என்று அடம்பிடித்தார்.
அதற்கு சேனல் தரப்பினரும் சரி என்று சொல்லினர். பின் ரக்ஷனை விட அதிகமாக மணிமேகலை பேசுகிறாரே அப்போ அது ரக்ஷனுக்கு வருத்தத்தை கொடுக்காதா? அவருக்கு தன்மானம் இல்லையா? என்று குரேஷி பேசியிருக்கிறார்.