என் அப்பாவே என்கிட்ட தப்பா நடந்துகொண்டார்.. நடிகை குஷ்பூ வேதனை
90- களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் குஷ்பூ. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய குஷ்பூ,தனது தந்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு தந்தையானவர் நமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். என்னுடைய 16 வயதில் இருந்து என் அப்பாவிடம் நெருக்கமாக இருந்ததில்லை.
அதன் பின்னர் என்னுடைய அப்பாவை பார்க்கவில்லை. இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா என்பது கூட எனக்கு தெரியாது. அதை பற்றி எனக்கும் அக்கறையும் இல்லை. என்னுடைய அப்பா என்னிடம் தவறாக நடந்துகொண்டது என்னுடைய இதயத்தின் ஓரத்தில் எங்கேயோ இருந்துகொண்டே இருக்கிறது என்று குஷ்பூ கூறியுள்ளார்.