இரண்டு வருட போராட்டம்!! இவ்வளவு நடந்தும் மாதம்பட்டி ரங்கராஜை விட்டுக்கொடுக்காத முதல் மனைவி..
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஜாய் கிரிஸில்டாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் ரகசிய திருமணம் நடந்து முடிந்தது. கர்ப்பமானதை அறிவித்த ஜாய், ரங்கராஜ் விலக நினைத்ததால் கோர்ட் வரை சென்று வெற்றிப்பெற்றார்.

குழந்தைக்கு தந்தை தான் தான் என்று ரங்கராஜ் ஒப்புக்கொண்டார். அந்த சமயத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, தன் கணவருக்கு பக்கபலமாக இருந்தார். அப்போது ஸ்ருதியை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
ஸ்ருதி போன்ற பெண்கள் இருப்பதால்தான் ஆண்கள் எந்த தவறையும் செய்ய துணிச்சலோடு இருக்கிறார் என்றும் இந்த விவகாரத்தில் முதல் மனைவி செய்தது வரலாற்று பிழை என்றும் கூறினர்.
ஆனால் ஸ்ருதியை பொறுத்தவரை கணவரை பாதுக்காப்பது, அவருக்கு அரணாக நிற்பது என முடிவோடு இருந்தார். இறுதியாக டி.என்.ஏ டெஸ்ட்டில் பங்கேற்ற மாதப்பட்டி தான் என் குழந்தைக்கு தந்தை என்பதை மகிழ்ச்சியுடன் ஜாய் அறிவித்தார்.

முதல் மனைவி ஸ்ருதி
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் நிறைய சவால்களை சந்தித்தேன், யார் சொன்னாலும் இன்ஃப்ளூயன்ஸாகக் கூடாது.
கணவன், மனைவிக்குள் புரிதல் ரொம்ப முக்கியமான விஷயம், நான் இன்று வெற்றி அடைந்திருப்பதற்கு ரங்க்ராஜ் மட்டும்தான் காரணம் நம் மனசாட்சிக்கு உண்மையாக இருந்தால் போதும் என்று ஸ்ருதி பேசியுள்ளார்.