திருமணமாகி ஒரே மாதத்தில் மஹாலக்ஷ்மி எடுத்த அதிர்ச்சி முடிவு! எதிர்பார்த்தது தானே
மஹாலக்ஷ்மி-ரவீந்தர்
சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து வருகிறார். அவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருப்பதியில் திருமணம் முடித்த நிலையில் அதற்கு பின் போட்டோ வெளியிட அது இணையத்தில் படுவைரல் ஆனது.
திருமணத்திற்கு பின் அவர்கள் பல்வேறு சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்தனர். பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டார் என்று கூட ட்ரோல்கள் வந்தது. அதற்கும் அவர்கள் பதிலடி கொடுத்தனர்.
அதிர்ச்சி முடிவு
திருமணத்திற்கு பிறகும் மஹாலக்ஷ்மி தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் நடிப்பதை நிறுத்த போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
எதனால் இந்த முடிவு என்பதை அவர்களே அறிவித்தால் தான் தெரியவரும். நடிப்பதை நிறுத்திவிட்டு மஹாலக்ஷ்மி சொந்தமாக சீரியல் தயாரிக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.