அசிங்கப்படுத்திய நடிகை நயன்.. ரஜினி கூறிய அந்த வார்த்தை!! உண்மையை கூறிய நடிகை மம்தா
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை மம்தா மோகன் தாஸ், நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், நடிகை மம்தா மோகன் தாஸ் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் குசேலன் படத்தின் போது நடிகை நயன்தாராவுக்கு தனக்குமான பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார். அப்படத்திற்காக வேறொரு ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு சென்றேன். 4 நாட்கள் ஷூட் என்று சொல்லி 3 நாட்கள் ஷூட்டிங் நடக்காமல் இருந்தது. அதன்பின் ஒருசில காட்சிகள் மட்டும் தான் உங்களுக்கு என்று சொன்னார்கள்.
அந்த பாடலில் நானும் இருக்கேன் என்று சொல்லிவிட்டு அதை நடத்தவில்லை. இதுபற்றி யாரிடமும் சென்று புகார் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அந்த படத்தில் நடித்த நடிகை வேறொரு நடிகை நடித்தால் நான் படத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறாராம்.
பின் இரண்டு மூன்று வாரங்களுக்கு பின் ரஜினி சாரிடம் இருந்து எனக்கு கால் வந்தது. படத்தில் நடிக்க வந்ததற்கு நன்றி என்று மட்டும் கூறி வைத்துவிட்டார்.
எனக்கு மட்டும் இதுபோல் நடக்கவில்லை பலபேருக்கு இப்படி நடிக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் மக்கள் கொடுக்கவில்லை, அவர்களாகவே போட்டுக்கிட்டது தான். பிஆர் வைத்து பேப்பரில் பட்டத்தை போட்டுக் கொள்கிறார்கள்.