செட்டுக்குள்ளயே கோபப்பட்டு பேசிய மணிமேகலை, கேரவனுக்கு சென்ற ப்ரியங்கா.. இதுதான் நடந்ததா
விஜய்-அஜித் ரசிகர்கள் சண்டையை விட தற்போது இணையத்தில் மிகப்பெரும் பேசுப்பொருளாக இருக்கும் சண்டை மணிமேகலை, ப்ரியங்கா தான்.
இதில் மணிமேகலை சில தினங்களுக்கு முன்பு இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இனி வர மாட்டேன், என் தன்மானமே முக்கியம் என்று சொன்னது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.
இதில் ப்ரியங்கா பக்கம் இருந்து எந்த ஒரு விளக்கமும் வராத நிலையில், குக் வித் கோமாளி செட்டிற்குள் என்ன நடந்தது என்பதை Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இதில், திவ்ய துரைசாமி எலிமினேட் ஆனப்போது ப்ரியங்காவை புகழ்ந்து பேசி வந்துள்ளார். அவர் பேசி முடித்ததும் மணி மேகலை பேச வேண்டிய இடத்தில் ப்ரியங்கா பேச, உடனே மணிமேகலை கோபமாக, இங்கு யார் ஆங்கர், நான் தானே பேச வேண்டும் என கத்தியுள்ளார், ப்ரியங்கா அத்தனை பேர் முன்பும் மணிமேகலை கத்தியதால் கோபமாக கேரவனுக்குள் செல்ல, ப்ரோடைக்ஷன் தரப்பு மணிமேகலையை மன்னிப்பு கேட்க கூறியுள்ளனர்.
ஆனால், மணிமேகலை கடைசி வரை மன்னிப்பு கேட்க மாட்டேன், அப்படி மன்னிப்பு கேட்டு தான் இந்த நிகழ்ச்சி வேண்டும் என்ற அவசியமில்லை என நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.