எதுக்கு நான் சொம்புன்னு பேர் வாங்கவா.. மணிமேகலை - பிரியங்கா விவகாரத்தை பற்றி பேசிய KPY சரத்..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சமீபத்தில் 5வது சீசன் துவங்கி மக்களிடம் நல்ல ஆதரவை பெற்று வந்தது.
மணிமேகலை - பிரியங்கா
இறுதிக்கட்டத்தில் இருக்கும் போது மணிமேகலை, நிகழ்ச்சி விட்டு விலகுவதாகவும் பெரிய தொகுப்பாளரின் ஆக்கிரப்பு தன்னை தொந்தரவு செய்வதாகவும் என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் கூறி வீடியோவை வெளியிட்டார்.
இதற்கு மணிமேகலைக்கு ஆதரவளித்தும் பிரியங்காவை வசைப்பாடியும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் மணிமேகலை - பிரியங்கா பிரச்சனை குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
நடிகர் சதீஷ் நடிப்பில் செப்டம்பர் 27ல் வெளியாகவுள்ள சட்டம் என் கையில் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்தவகையில் கலக்கப்போவது யாரும் பிரபலமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளியாகவும் பணியாற்றி வரும் சரத் செய்தியாளர்களிடம் பேசினார்.
KPY சரத்
அப்போது மணிமேகலை விவகாரம் பற்றிய கேள்விக்கு இது நாட்டுக்கு தேவையான பிரச்சனையா? தேவையில்லாம பிரச்சனை பண்ணி அதை வீடியோவா பண்ணி, இதெல்லாம் தேவை இல்லாதது.
அவங்க போட்ட வீடியோவுல எல்லாத்தையும் சம்பாதிச்சிட்டாங்க, இன்னொருத்தவங்க சம்பாதிச்சிட்டு தான் இருக்காங்க, பாக்குற நாம்தான் ஒன்னுமே இல்லாம இருக்கோம். அதனால் இது முக்கியமான விஷயமெ கிடையாது, இது ஒரு சில சின்ன ஈகோ விஷயம் தான். நான் யாருக்கு சப்போர்ட் பண்ணனும்னு அவசியம் இல்லை, இவங்க இன்னிக்கு அடிச்சிப்பாங்க, நாளை சேர்ந்துப்பாங்க, இதுக்கு நடுவுல நாமதான் முட்டாளா ஆகிருவோம். நான் எதாவது சொல்லி சொம்புகிங்குன்னு வாங்குறதா என்று கூறியிருக்கிறார் சரத்.