500 கோடிக்கு ஆப்பு வைத்த ராஜமெளலி? பிரமோஷனுக்காக கெஞ்சிய மணிரத்னம்

Vikram S. S. Rajamouli Ponniyin Selvan: I Mani Ratnam
By Edward Jul 13, 2022 08:58 AM GMT
Report

முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் மணிரத்னம் இயக்கத்தில் 500 கோடி ரூபாய் செலவில் பொன்னியின் செல்வம் படம் உருவாகியுள்ளது. முதல், இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

படத்தின் டீசர் வெளியிட்டுக்கு பிரம்மாண்டமாக தஞ்சை பெரிய கோவிலில் நடத்த திட்டமிட்டு இருந்தும் சில காரணங்களால் சென்னையில் நடத்தியுள்ளனர். டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு விக்ரம் மட்டும் உடல் நலக்குறைவால் வரவில்லை. ஐஸ்வர்யா ராயும் சில காரணங்களால் வரமுடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் பிரமோஷன் வேலைகளுக்கு படத்தில் நடித்த சில நட்சத்திரங்கள் மட்டுமே வர முடிவெடுத்த நிலையில் 500 கோடிக்கு பிரச்சனையாகிவிடும் என்பதற்காக மணிரத்னம் இயக்குனர் ராஜமவுலியிடம் சென்றுள்ளார். ராஜமவுலியை சந்தித்து பேசிய மணிரத்னம், மற்ற மாநிலங்களில் உங்கள் மார்க்கெட் என்னைவிட உங்களுக்கு தான் அதிகம்.

அதனால் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் எங்கு சென்றாலும் கூட வரவேண்டும் என்று கேட்டுள்ளாராம். ஆனால் ராஜ மவுலி இது குறித்து எந்தவொரு பதிலும் கூறாமல் இருந்துள்ளாராம். இதனால் தான் என்ன செய்வதென்று முழித்து வருகிறாராம் மணிரத்னம்.