30 வருட நட்பை தூக்கி எறிந்த இயக்குனர்.. வைரமுத்துவை ஒதுக்க இப்படியொரு காரணமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் மணிரத்னம். செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக எடுத்து வந்த படம் பொன்னியின் செல்வன்.
இரு பாகங்களாக பொன்னியின் செல்வன் நாவலை தழுவி கற்பனையோடு எடுத்துள்ளார் மணிரத்னம். வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்ட முறையில் வெளியாகவுள்ளது.
வைரமுத்து - ரகுமான் - மணிரத்னம்
மணிரத்னம் - ஏ ஆர் ரகுமான் என்றால் அப்படத்தின் பாடலாசிரியராக வைரமுத்து தான் இருப்பார். ஆனால் வைரமுத்து இப்படத்தில் இல்லாமல் இளங்கோ கிருஷ்ணன், கபிலன், சிவ ஆனந்த், கிருத்திகா நெல்சன் உள்ளிட்ட கலைஞர்கள் தான் பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் படக்குழுவினர், நேற்று சென்னையில் நடைபெற்ற பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்துள்ளனர்.
கூட்டணி உடைய காரணம்
அதில், வைரமுத்துவை ஏன் பொன்னியின் செல்வன் படத்தில் இணைக்கவில்லை என்று மணிரத்னத்திடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு மணிரத்னம், ரோஜா படம் முதல் நான், ஏ ஆர் ரகுமானுடன் வைரமுத்து பயணித்தார்.
பல ஹிட்டும் கிடைத்தது. ஆனால் வைரமுத்துவை விட பல கலைஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். அவரைவிட திறமையானர்கள் இருக்கிறார்கள், புது இயக்குனர்கள் கலைஞர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற முடிவால் தான் இப்படி என்று கூறியுள்ளார்.