இருந்த ஒரு வசூலும் போச்சா, சூர்யா நிலைமை ஏன் இவ்ளோ மோசமானது, ரசிகர்கள் வேதனை
சூர்யா ஒரு காலத்தில் விஜய், அஜித்தை எல்லாம் தண்டி ரஜினிக்கு நிகராக வளர்ந்து வந்தவர். எந்த நேரத்தில் அஞ்சான் படத்தை கமிட் செய்தாரோ அன்றிலிருந்து சறுக்கல்களையே சூர்யா சந்தித்து வருகின்றார்.
இந்நிலையில் சூர்யா கெரியரில் கடைசியாக மிகப்பெரிய வெற்றி என்றால் சிங்கம் 2 தான், இப்படம் ரூ 130 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது.
மேலும், தமிழகத்தில் இப்படம் ரூ 62 கோடி வசூல் செய்து அந்த நேரத்தில் மிகப்பெரும் சாதனையை படைத்தது.
இதை தொடர்ந்து சூர்யாவின் எந்த ஒரு படமும் இந்த வசூலை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், அவர் நடித்த பாதி படங்கள் இதன் பிறகு தோல்வி தான்.
தற்போது மலையாளத்திலிருந்து தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்திய மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 62 கோடி வசூலை தாண்டியுள்ளது.
இதன் மூலம் சூர்யாவின் அதிக வசூல் படமான சிங்கம் 2 வசூலை பக்கத்து மாநில படமான மஞ்சும்மல் பாய்ஸ் தாண்டியது ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் ஆகியுள்ளது. சீக்கிரம் மீண்டு வாருங்கள் சூர்யா..