ஒரு பைசா கொடுக்காம ஓசியில் திருமணம்? கோடிக்கு ஆசைப்பட்டு ஆண்டி-யான நயன்-விக்னேஷ்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நானும் ரவுடி தான் படத்தில் ஆரம்பித்த காதலை 7 வருடங்களுக்கு பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் திருமணத்தால் முடித்து வைத்துள்ளார்.
ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் வீடியோ உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கவுள்ளதாக கூறி அனைத்து செலவுகளை செய்துள்ளது. பின் திருமணத்தின் போதே விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களை வெளியிட்டார்.
அதன்பின் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்ததை அடுத்து நட்சத்திரங்கள் வந்த புகைப்படங்களையும் வெளியிட்டார். ஒரு பைசா இல்லாமல் திருமணத்தை முடித்து அதன்மூலம் 25 கோடிக்கு ஆசைபட்ட விக்னேஷ் சிவன் யோசிக்காமல் இந்த புகைப்படங்களை வெளியிட்டுவிட்டார்.
இதனால் தற்போது வரை நெட்பிளிக்ஸ் நிறுவானம் திருமணம் வீடியோவை வெளியிடாததற்கு விக்னேஷ் சிவன் அப்போது புகைப்படத்தை வெளியிட்டதால் அதன் மதிப்பினை ரசிகர்களிடம் பெறாமல் போய் விடும். இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வீடியோ ஸ்டீமிங் செய்வதில் இருந்து பின் வாங்கியுள்ளது.
திருமணத்தால் நயன் தாரா போட்டு வைத்த அனைத்து பிளான்களும் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்களால் சின்னாபின்னமானது. இதனால் திருமணத்தில் செலவாக எல்லா செலவுகளையும் இதன்மூலம் சரிகட்டிவிடலாம் என்ற நினைத்திருந்தார்.
அது முடியாமல் நயன் தாராவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாம். இதனால் என்ன செய்வது என்று நயன் தாரா புலம்பி வருகிறாராம். இதற்கு ஒரு வழியா அதை சரிக்கட்ட வாங்கும் சம்பளத்தினை 10 கோடியாக உயர்த்தி இருக்கிறார் நயன் தாரா.
ஜவான் படத்திற்காக 8 கோடி அளவில் பேசப்பட்ட நயன்தாரா , தன்னுடைய 75 வது படத்திற்காக 10 கோடி சம்பளமாக கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.