மெட்டி ஒலி காவேரியா இது!! இப்படி ஒல்லியாகி ஆளே மாறிட்டாங்களே..
மெட்டி ஒலி காவேரி
தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் ஒரு காலத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை காவேரி. மெட்டி ஒலி சீரியலில் தனம் என்ற ரோலில் நடித்து பிரபலமான காவேரியின் சமீபத்திய புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கேரளாவை சேர்ந்த காவேரி, வைதேகி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். அப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் காசி, கண்ணுக்குள் நிலவு, புன்னகை பூவே போன்ற படங்களில் நடித்து பின் வாய்ப்பில்லாமல் சீரியல் பக்கம் வந்தார்.
சமீபகாலமாக சினிமா நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் தலைக்காட்டாத காவேரி, வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்தாக பேட்டிகளில் கூறியிருந்தார்.
தன் அம்மாவை இழந்து மன உளைச்சல் ஏற்பட்டு தைராய்டு பிரச்சனையால் உடல் எடை கூடிவிட்டேன் என்றும் பின் டாக்டர் ஆலோசனைப்படி மருந்துகளில் மாற்றம் செய்தபோது உடல் எடை வேகமாக குறைந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும் மீண்டும் நடிக்க ஆசைதான், ஹீரோயினாக நடிக்க ஆசையில்லை, அம்மா, அக்கா ரோல் கிடைத்தால் கூட கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். காவேரியின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து பலருக்கும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
