எரியுற தீயில் எண்ணெய் ஊற்ற விரும்பல!! ஏ ஆர் ரஹ்மான் விவாகரத்து சர்ச்சை.. மோகினி டே பதிலடி
ஏ ஆர் ரகுமான் விவாகரத்து
முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி சாயிராவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. இது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 29 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரத்திற்கு பின், அவரது இசை குழுவில் bassist-ஆக இருக்கும் மோகினி டே என்பவரும் தனது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதனை வைத்து பலர் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்துக்கு அந்த பெண் தான் காரணமா என கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
ஆனால், அந்த பெண்ணுக்கும், இந்த விவாகரத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என சாயிராவின் வக்கீல் விளக்கம் கொடுத்திருந்தார். மேலும், வதந்தி செய்திகள் குறித்து, ஏ ஆர் ரஹ்மானின் மகன் வெட்கமே இல்லையா என்று கடுமையாக திட்டியும் ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார்.
மோகினி டே பதிலடி
இந்நிலையில், மோகினி டே தனது இன்ஸ்டா பக்கத்தில் வதந்திகள் குறித்து கோபப்பட்டு ஒரு பதினை பகிர்ந்திருக்கிறார். என்னை நேர்காணம் எடுக்க கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை.
என்னை பேட்டி எடுப்பதற்காக அணுகியவர்கள் அனைவரிடமும் முடியாது என்று கூறிவிட்டேன். வதந்திகளுக்கு பதிலளித்துக் கொண்டு அதன்பின்னால் ஓடி எனது சக்தியையும் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. எனது தனியுரிமையும் சுதந்திரத்தையும் மதிக்கவும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் மோகினி டே.
