காசு விசயத்தில் ஏமாற்றிய ஏ ஆர் முருகதாஸ்!! உதவி இயக்குனரை வைத்து பழித்தீர்த்த நடிகை நயன்தாரா
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா தற்போது வரிசைக்கட்டி நிற்கும் பல படங்களில் நடித்தும் வருகிறார். கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து தயாரிப்பிலும் ஈடுபட்டு நடித்து வருகிறார்.

ஏ ஆர் முருகதாஸ் - கஜினி, தர்பார்
தயாரிப்பில் ஈடுபட சில இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் சம்பள பாக்கியால் கஷ்டப்பட்டு வந்ததால் தான் என கூறப்பட்டது. அப்படி ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் கஜினி. அப்படத்தில் நயன் தாராவுக்கும் முருகதாஸுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதேபோல் சூப்பர் ஸ்டார் நடிப்பில் தர்பார் படத்திலும் நடித்திருந்தார்.
அப்படத்திலும் சம்பளம் பாக்கி இருந்ததால் கடைசி நேரத்தில் கிளைமேக்ஸில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் நயன். ஆனால் சமாதானம் செய்து நயன் தாராவை நடிக்க வைத்திருக்கிறார் முருகதாஸ். இந்த சம்பவம் பெரியளவில் பேசப்பட்டதால் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளரை பற்றி நயன் பேட்டிக்கொடுத்து ஆதங்கமாக பேசியிருந்தார்.

பழி திர்த்த நயன்தாரா
இதனை மனதில் வைத்துக்கொண்டிருந்த நயன் தாரா, கத்தி படத்தில் உதவி இயக்குனராக முருகதாஸிடம் பணியாற்றியவரின் கதை திருடித்தான் அப்படத்தை வெளியிட்டார் என்ற செய்தி வைரலானது. உதவி இயக்குனருக்கு வசதியில்லாததால் அப்படியே விட்டிருக்கிறார்.
ஏமாற்றிய முருகதாஸை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அந்த உதவி இயக்குனருக்கு உதவியிருக்கிறார் நயன் தாரா. அப்படி அவரின் கதையாக உருவாகிய படம் தான் அறம். இயக்குனர் கொபி நாயனார் இயக்கத்தில் அப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
பண விசயத்தில் நயன் தாராவையும் கதை விசயத்தில் உதவி இயக்குனரையும் பழிவாங்க அறம் படம் லேடி சூப்பர் ஸ்டாருக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்தது.