விக்கி பேச்சை கேட்காத நயன்தாரா! திருமணம் தள்ளிப்போவது இதனால் தானா?
Nayanthara
By Parthiban.A
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இருவரும் வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஹிட் ஆகி இருக்கிறது.
அது பற்றி பேசிய விக்னேஷ் சிவன்.. "நயன்தாரா நான் சொன்னால் எதுவும் கேட்கமாட்டார். நான் சொன்னேன் என்பதற்காக ஒரு உணவை கூட சாப்பிடமாட்டார். அவருக்கு பிடித்திருந்தால் மட்டுமே செய்வார். இந்த ரெண்டு காதல் கதை அவருக்கு பிடித்ததால் தான் நடித்தார்" என கூறி இருக்கிறார்.
இதை கேட்ட நெட்டிசன்கள் 'அப்போ திருமணம் தள்ளி போவதற்கும் நயன்தாரா தானா?' என கேட்டு வருகின்றனர்.