பல வருடம் கழித்து பழைய காதலனை நேருக்குநேர் சந்தித்த நயன்தாரா, வெடித்த பிரச்சனை

Nayanthara Prabhu deva
By Tony Aug 21, 2021 04:00 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் பிரபலங்களுக்குள் காதல் வந்து பிறகு அது கானல் நீராக செல்வது எல்லாம் தெரிந்த கதை தான்.

அந்த வகையில் நயன்தாரா இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவாவை வில்லு படத்தின் போது காதலித்தார்.

அவர் பெயரை எல்லாம் பெரிதாக பச்சைக்குத்தினார், அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்வதாக முடிவெடுத்தார்கள், ஆனால், யார் கண் பட்டதோ இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதை தொடர்ந்து நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்யவுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் பாண்டிச்சேரியில் படபிடிப்பு நடந்து வருகிறது.

அப்போது ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவருக்கு ரூம் ரெடி பண்ண, அதே ஹோட்டலில் பிரபுதேவா அவர் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நயன்தாரா, பிரபுதேவா ஒரே நேரத்தில் சந்தித்துக்கொள்ள, நயன்தாரா செம்ம கோபமாகி, உடனே ஹோட்டலை மாற்றுங்கள் என கடுமையாக திட்டிவிட்டு கிளம்பிவிட்டாராம்.