அந்த ஆடையின் சைஸ் என்ன? கோபத்தில் திட்டித்தீர்த்த சீரியல் நடிகை நீலிமா..
சிவாஜி கணேசன், கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமானவர் நீலிமா ராணி. நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி, ராஜாது ராஜா போன்ற திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.
அதன்பின் சின்னத்திரையில் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தும் இருக்கிறார் நீலிமா ராணி. மெட்டிஒலி, கோலங்கள், அரண்மனை கிளி என முக்கிய சீரியல்களில் நடித்துள்ள நீலிமா 12 வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயானார்.

திருமண வாழ்க்கை
சமீபத்தில் நடிகை ஷகிலாவின் மகள் மிளா எடுத்த பேட்டியொன்றில் தன்னுடைய ஆதங்கமாக சூழ்நிலையை பகிர்ந்துள்ளார் நீலிமா ராணி. தன் கணவர் பற்றி அனைவருக்கும் தெரியும் அப்படி இருந்தும் அவர் உங்க அப்பாவா என கேட்பார்கள். மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மேலும், என் கணவரை நான் விடாமல் காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன். 12 வயது வித்தியாசமான அவரை கல்யாணம் பண்ணதை அப்போது யாருக்கும் தெரியவில்லை.
இப்போது எனக்கு 35 அவருக்கு 46 வயசாகிறது, மக்கள் கூறிவது காசுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா வயசகூட பாக்காமா என்று கூசாமல் பேசுராங்க. 13 வருஷமா என் கணவரை காதலித்து வருகிறேன். வாய்க்கூசாம இப்படி மக்கள் பேசுவது ஏன்? என்று ஆதங்கமாக கூறியுள்ளார்.

கொச்சையான மெசேஜ்
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணி சிலரின் ஆபாச மெசேஜ்களுக்கு செருப்படி பதிலை அளித்துள்ளார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த நீலிமாவிடம் இரு நபர்கள் ஏடாகூடமான கேள்வியை கேட்டுள்ளனர். உங்க உள்ளாடையின் சைஸ் என்ன என்றும் மற்றொருவர் உடலுறவு குறித்த கேவலமான கேள்வியை கேட்டிருந்தார், அதற்கு நீலிமா, நான் ஏன் உன்னிடம் சைஸ் கூறவேண்டும் என்றும் இந்த முட்டாளுக்கு நான் எப்படி பதில் அளிப்பது என்று கோபத்தில் பதிலளித்துள்ளார்.